வியாழன், அக்டோபர் 28, 2010

நாவின் நுனியில் உடைந்து தொங்கும் நிமிடங்கள்..

*
கைப்பிடி அளவே உள்ள
சாதுர்ய பதில்களில்
முரண்படும் நிமிடங்கள்
உடைந்து தொங்குகிறது
நாவின் நுனியில்..

சந்தேகக் குளம்புகள் அதிர
செந்நிறத்தில் கிளம்பும் ஓசைகள்
கண்களில் பரவி
மனக்காட்சிகள் யாவும்
உறைகிறது..

உறவுக்குரிய ஒப்பந்தச் சமுத்திரத்தின்
கரைகளில்..
உருளும் நுரைக் குமிழ் அள்ளிப்
பருகச் செய்கிறது..
உன் மீதான
நம்பிக்கையின் தீராத தாகம்..!

****

நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( அக்டோபர் - 10 - 2010 )

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31010106&format=html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக