வியாழன், அக்டோபர் 28, 2010

யாருமற்ற சபையின் மௌனங்கள்..

*
தோல்விகளின் வரலாற்றை
நாம் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்

சமரசங்களின் மீது
நம்பிக்கையிழந்த அடையாளங்கள்
அதன் மேஜையில்..
நகக் கீறலின் வடுவைப் போல்
தங்கி விடுகிறது..

யாருமற்ற சபையின்
வனையப்பட்ட மௌனங்கள்..
சொற்ப சொற்களுடன் போரிடுகின்றன

யாவற்றையும்
குறிப்பெடுத்துக் கொள்ளும்படி..!

*****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( அக்டோபர் - 29 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11181&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக