வெள்ளி, அக்டோபர் 29, 2010

பேசுவதற்கு ஏதுமற்ற நீண்ட வழி..

*
பேசுவதற்கு ஏதுமற்ற
நீண்ட வழி

இத்தனைப் பேர்
உடன் வந்தும்
ஏதுமற்ற வழியாகிப் போனது
உன்னைச்
சுமந்து செல்லும்
இந்த இறுதிப் பயணம்

பூக்கள் நசுங்கி வழிகின்றது
பின்தொடரும்
வாகன டயர்களில்

மௌனம் தேங்கும் முகங்கள் தோறும்
பொடிப்பொடியாய் வியர்க்கிறது
உன் மரணம்

****

2 கருத்துகள்:

  1. பொடிப்பொடியாய் வியர்க்கிறது
    உன் மரணம்
    yenra kadaisi iruvarikal kavithai uchcham perukirathu ilango. arumai.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் ரசிக்கும் தன்மைக்கு நன்றி... கோநா..!
    :)

    பதிலளிநீக்கு