சனி, அக்டோபர் 30, 2010

நதிக் குமிழ்..

*
தனிமை நதியில்
மூழ்கும் முன்
குமிழ்கள் உப்பியபடி
சேகரமாகின்றன
இருத்தலின் வெப்பம் உள்ளடங்கி

மீளவியலா நினைவுச் சுழியில்
சிக்கிப் பதறவோ
இழுபட்டு
மௌன உச்சியிலிருந்து சரியவோ
நிர்ப்பந்திக்கிறது

நதியின் குளுமை..

****

1 கருத்து:

  1. தனிமை நதி குளுமை தருவது நம் போல் வெகு சிலருக்கு மட்டுமே இளங்கோ. சுவாசத்தை, இருத்தலின் வெப்பத்துடன் சொன்னது கச்சிதமான, புதுமையான குறியீடு. super.

    பதிலளிநீக்கு