சனி, அக்டோபர் 30, 2010

ஒரு மழையும் இரண்டு காபி கோப்பைகளும்..

*
சற்று முன்
கவிதைக்குள்
பெய்த
என்
மழையொன்று

காகிதத்திலிருந்து
வழிந்திறங்கி மேஜையில் தேங்குகிறது

காபி கோப்பைகளோடு
அருகில் வந்தமர்ந்து
மனைவி கேட்கிறாள்

அழுதீங்களா என்ன..!

****

2 கருத்துகள்:

  1. இளங்கோ, உடனே நொந்து நூலாகி அழ ஆரம்பிச்சு இருப்பீங்களே, இப்ப உங்க மனைவி சொன்னது உண்மையாகிடுச்சு பார்த்தீங்களா? அவங்க ஒரு தீர்க்கதர்சி

    பதிலளிநீக்கு
  2. அந்தக் கேள்வியும் ஒரு கவிதையாக மாறக்கூடும் என்றால்..அந்த தீர்க்க தரிசனம் ஒரு வரப்பிரசாதம் தானே..!

    பதிலளிநீக்கு