*
அவன் பிரியத்தின் மடிப்பு
கலையவில்லை
அதைக் கச்சிதமாக உடுத்திக்கொள்ள
அவளுக்கொரு தனிமை தேவைப்படுகிறது..
பழகும் நாட்களின் பரிவர்த்தனையில்
சின்னஞ்சிறு இழப்புகளைப்
பெற்றுக் கொள்வதில் வருத்தமில்லை..
அதைத்
திருப்பித் தரும் பொருட்டு
உருவாகும் சந்தர்ப்பங்களை..
ஒன்றின் மேல் ஒன்றாக
அடுக்கி வைக்கிறது
ஒவ்வொரு சந்திப்பும்..!
****
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( அக்டோபர் - 24 - 2010 )
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31010245&format=html
// அவன் பிரியத்தின் மடிப்பு
பதிலளிநீக்குகலையவில்லை
அதைக் கச்சிதமாக உடுத்திக்கொள்ள
அவளுக்கொரு தனிமை தேவைப்படுகிறது.. //
என்னே அழகான வரிகள்..!!
ரசிகனின் மடிப்பு கலையாத ரசனையை உடுத்திக்கொண்டிருக்கிறது கவிதை...
--
அன்புடன்
கவிநா...
நன்றி..!
பதிலளிநீக்குகவிநா :)