வியாழன், அக்டோபர் 28, 2010

முற்றத்து மழை ஈர மணல்..

*
சின்னஞ்சிறு தாளச் சிதறலில்
முற்றத்து மழை
ஈர மணல்துகளை
வாரி இறைக்கிறது

எழுதிக் கொண்டிருக்கும்
கவிதை முழுதும்

அதிலொன்று
முற்றுப் புள்ளியாய் விழுந்து உப்புகிறது..!

***

3 கருத்துகள்: