சனி, அக்டோபர் 30, 2010

பூக்க விரும்பும் பூக்களுக்காக..

*
நீ நினைப்பது போல்
முடிந்துவிடுவதில்லை
என் கோரிக்கை

அது ஒரு
பிரார்த்தனைக்கான ஏற்பாடு

உன்னை நோக்கி
மெல்லிய கோடு என
பென்சில் கொண்டு
கிழிக்க வேண்டிய பாதையில்

பூக்க விரும்பும் பூக்களுக்காக

மழையை நோக்கி
எழுப்பப்படும்
ஓர்
அறைக்கூவல்

****

2 கருத்துகள்:

  1. இளங்கோ, பிரிதலின் வலியிலும், வெறுப்பு துளியும் வராத இதயம் , பின்னாளில் இவ்வலியிலிருந்து மலரக் கூடிய மகிழ்ச்சியான நினைவுப் பூக்களை யோசிக்கும் கவிதையோ?
    ஏனெனில் அந்த மெல்லிய கோடு இருவரையும் சேர்ப்பதைவிட பிரிக்க வரையப்பட்டதாகவே சுட்டுகிறது எனக்கு, அருமை.வலியிலும் வாழ்வின் மீதான நம்பிக்கையின் அறைகூவல் இது. சரியா?

    பதிலளிநீக்கு
  2. அதனால் தான்..அந்த பிரிக்கும் கோட்டில் பூக்கள் பூக்க வேண்டும் என்பதே மழை நோக்கிய அறைகூவலாக மாறுகிறது.
    சரி தான் கோநா..!

    பதிலளிநீக்கு