வியாழன், அக்டோபர் 28, 2010

மெட்ரோ கவிதைகள் - 87

*
அண்ணாந்து வாய் பார்க்கும்
குரங்குக் குட்டி
தாளமடிப்பவனின்
சேஷ்டைகளை
பசியோடு பட்டியலிடுகிறது

தலையில் தட்டை ஏந்தி
சலாம் வைத்து
கூட்டத்தை வலம் வந்து
சிதறும் காசுப் பொறுக்கி இளிக்கிறது..
நகரம் புரியாமல்

***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக