வெள்ளி, அக்டோபர் 29, 2010

மௌன நுனி..

*
சொட்டு சொட்டாய்
துயரம் வழிந்திறங்குகிறது
மழைத் தாழ்வாரத் தனிமையில்

சாளரத் தென்றல்
அசைத்துப் போகும்
மௌன நுனியைப் பற்றிக் கொள்ளும்
விரல் ரேகைகளில்
எதையோ
எழுத எத்தனிக்கிறது

இழப்பின் வலி

****

2 கருத்துகள்:

  1. இளங்கோ, பொழிந்து போய்விட்ட மழைப் பெண்ணைப் போல பிரிந்து போய் விட்ட ஒரு பெண்ணை இழந்த வலியோ அந்த இழப்பின் வலி? அருமை..

    பதிலளிநீக்கு
  2. அடடா..!
    கருத்துரையை வெகுவாக ரசித்தேன்...கோநா..
    :)

    பதிலளிநீக்கு