ஞாயிறு, நவம்பர் 28, 2010

காட்சி நினைவுத் திரள்..

*
பாரபட்சங்கள் இல்லாத கனவுகளின் நிறம்
சாம்பல் தோய்ந்து நெளிகிறது

கண் கூசும் ஒளிப் பாய்ச்சலில்
உலர்வதான பாவனையில்
ஈரம் காய்ந்து அசைவுகளை மூடிக் கொள்ளும்
இமைகளின் திரட்சி
ஒரு காட்சியை நினைவுத் திரளில்
அடுக்கித் தொகுக்கிறது

பின்வரும் நாட்களின் தேவைக் கருதி

விழிப்பில் நசுங்கும் எண்ணங்களின் விலா எலும்பில்
உறுத்தலோடு விரல் நிமிண்டும் நிமிடங்கள்
பிறந்தும் இறந்துமாக
எழுந்து அமரும் படுக்கையில் கிடத்தப்படுகிறது

கனவின் துர்மரணத்தை நொந்தபடி..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக