திங்கள், நவம்பர் 22, 2010

இலையொன்று உதிர்ந்து பூமி தொடும் அவகாசம்..

*
அசலான ஒரு நம்பிக்கைக்குள்
மிகு ஆறுதலாக
ஒரு
ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

பிரிவின் துயரை
நகம் கடித்துத் துப்பிவிட
முடிகிறது உன்னால்

இலையொன்று உதிர்ந்து
பூமி தொடும் அவகாசத்தில்
முடிவுகள் எடுக்கிறாய்

மென்மை விரிசலில்
உடையக் காத்திருப்பது கண்ணாடியல்ல
இது நெடுக
இரவுகளில்
நாம் பரிமாறிக்கொண்ட முத்தங்கள்

கோபத்தில் துடிக்கும் உன் உதடுகளில்
எனக்காக
நீ வாசித்துக் காட்டிய
கவிதைகளின் ஈரம்
கொஞ்சமாவது மிச்சமிருக்கும்

ஆனால்
அடம் பிடிக்கிறாய்

என்
அசலான நம்பிக்கைக்குள்
மிகு ஆறுதலாக
ஒரு
ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

ஒரு வருடமாவது
சேர்ந்து வாழ வேண்டுமென..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( நவம்பர் - 17 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=11432&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக