புதன், ஏப்ரல் 22, 2009

மெட்ரோ கவிதைகள் - 2

*
வெயிலொன்று
ஜனநாயகச் சாலையில்
உருகி வழிகிறது
எல்லாக்
கோடையிலும்.

மாநிலக்
கோட்டை மதில் சுவர்
நெடுக..
பளபளவென்று
வர்ணம் பூசிக்கொண்டு..
பல்லிளிக்கிறது
வறுமை..

தரையில்
நெளியும்
தேசியக்கொடியின்
நிழலசைவை யொத்து

முன்னும்
பின்னும்
நகர்ந்துக்
கொண்டேயிருக்கிறது

ஒரு
கருஞ் சிவப்பு எறும்பு..!

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக