புதன், ஏப்ரல் 22, 2009

விதிகளோடு திரி..

*

நீ
உனக்கான
விதிகளோடு திரி..

அம்மா
சோறு ஆக்கி வைத்திருப்பாள்.

உண்டு
செரித்து
படுத்து எழு..

உனக்கான
விதிகளோடு திரி..

வீட்டுக்குத் திரும்பும்போது..

மீண்டும்..
அம்மா
சோறு ஆக்கி வைத்திருப்பாள்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக