செவ்வாய், ஏப்ரல் 21, 2009

கானல் மீன்கள்..!

*
நெடுஞ்சாலைக்
கானல் நீரில்..

மூர்ச்சையிழந்து..
மூழ்குகின்றன..

நிழல்
மீன்கள்..

வேடிக்கைப் பார்க்க
சபிக்கப் பட்ட..
மின் கம்பங்கள்..

எப்போதாவது
விரையும் வாகனத்தின்...
பேரோலத்தில்..

சிதறும்
கானல் நீரில்...

நசுங்கும் மீனைக் கண்டு...

அசைவற்று
நிற்கும்..
நடுங்கியபடி..!

****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் - 4.5.09 )
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1355

1 கருத்து: