*
நெடுஞ்சாலைக்
கானல் நீரில்..
மூர்ச்சையிழந்து..
மூழ்குகின்றன..
நிழல்
மீன்கள்..
வேடிக்கைப் பார்க்க
சபிக்கப் பட்ட..
மின் கம்பங்கள்..
எப்போதாவது
விரையும் வாகனத்தின்...
பேரோலத்தில்..
சிதறும்
கானல் நீரில்...
நசுங்கும் மீனைக் கண்டு...
அசைவற்று
நிற்கும்..
நடுங்கியபடி..!
****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் - 4.5.09 )
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1355
அருமை...
பதிலளிநீக்கு