புதன், ஏப்ரல் 22, 2009

நா..!

*

இனிப்பு - புளிப்பு
காரம் - துவர்ப்பு
உப்பு..

சேர்ந்து..
கொஞ்சமாய்
வார்த்தைகளும் ஊறும்
நாவில்..

அரைக்கும் சுவையோடு
கிளர்ந்து
எழும்
எச்சிலைத் துப்புவது..

தெருவில்
மட்டுமல்ல..

சமயத்தில்..

எதிர்படும்
பகைவனின் மீதும்..

*****

1 கருத்து: