புதன், ஏப்ரல் 22, 2009

என் தலைவன் அழைக்கிறான்..

*

பந்தலிட்ட
இரவின் கீழ்..

உமிழும்
நிலவின் ஒளியில்..

கொழுந்தெரியும்
வார்த்தைகளோடு..
நரம்புத்
தெறிக்க..

என்
தலைவன் அழைக்கிறான்..

உயிர் ஊடுருவும்
பார்வையில்
குத்திக்
கிழிக்கிறான்
உணர்வை..

சூடாகும்
ரத்தம்
கொப்புளித்து
வெடிக்கும் குமிழின்
சாரலில்..

புள்ளிகளாய்
துளிர்க்கிறது..
தன்மானம்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக