சனி, ஏப்ரல் 04, 2009

ஒரு புன்னகை..

*

குயவன்
விரல் நேர்த்தியோடு..
வனைய
முயல்கிறேன்..
உன்
புன்னகையை..

குழையும்
எழுத்துக்களோ..
ஈரப்
பிசுப்பிசுப்போடு..
ஒட்டிக் கொள்கிறது..
காகிதத்தில்..

*****

2 கருத்துகள்: