திங்கள், ஏப்ரல் 27, 2009

பொடி இலைகளோடு..

*

மௌனப்
பூக்களின்
மகரந்தச் சேர்க்கையில்

நறுமணக்
கண்ணாடி யொன்று
'பட்' டென்று
வெடிக்கிறது..

பொடி
இலைகளின்
காய்ந்த
மொடமொடப்பை

காற்று..
தரையில் உருட்டி
இசைத்துப் போகிறது..

பயந்து விலகி
சுவரேறிய..

எறும்பின்
கறுத்த முதுகில்..
இசை
தொற்றிக் கொண்டது..!

****

1 கருத்து:

  1. எறும்பின்
    கறுத்த முதுகில்..
    இசை
    தொற்றிக் கொண்டது..!

    * நீ கவிதைக்காரன் ..விழியெனும் டைரியில்
    உன் நெஞ்சக்கனாக்கள் .

    பதிலளிநீக்கு