திங்கள், ஏப்ரல் 27, 2009

காகத்தின் குரல்..

*

கா..கா..வென
கரையும்
காகத்தின்
குரலொன்று..
என்
தூக்கத்தை
கொத்துகிறது..

இமைகளுக்குள்
உருண்டசையும்
கண்களின்
உட்கூரையில்
செருகிக்கிடக்கிறது
சில
கவிதைகள்..

விம்மிப்
புடைக்கும்
நினைவின் உப்பலில்..

பிதுங்கி
வழிகிறது
உன்
பழைய
புன்னகை ஒன்று..

கா..கா.. வென
கரையும்
காகத்தின் குரல்
இன்னும்
கொத்துகிறது
என்
தூக்கத்தை..

*****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் - 4.5.09 )
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1355

2 கருத்துகள்:

  1. இந்த வரியென்று குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை... அனைத்து வரிகளும் அருமை... வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  2. ஈருயிர் பரிணாமத்தின் வரைப்படம் .

    பதிலளிநீக்கு