செவ்வாய், ஏப்ரல் 21, 2009

எழுதிக் கொண்டிருக்கிறாய் ஒரு மௌனத்தை

*
மின் விசிறிக் காற்றில்..
தளும்பும்..
குவளை நீரின்
மேற்பரப்பில்..

உணவகத்தின்
உட்கூரை நிறமொன்று..

நெளிகிறது..
மௌனமாய்..

மேஜையில்
சிந்திய
ஒற்றை நீர்த்துளியை..
விரல் நுனியில்..
வட்டம் வரைந்தபடி..

நீயும்
எழுதிக் கொண்டிருக்கிறாய்..
ஒரு மௌனத்தை..!

****
நன்றி : ( உயிர்மை.காம் / உயிரோசை - 18.5.09)
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1418

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக