*
மின் விசிறிக் காற்றில்..
தளும்பும்..
குவளை நீரின்
மேற்பரப்பில்..
உணவகத்தின்
உட்கூரை நிறமொன்று..
நெளிகிறது..
மௌனமாய்..
மேஜையில்
சிந்திய
ஒற்றை நீர்த்துளியை..
விரல் நுனியில்..
வட்டம் வரைந்தபடி..
நீயும்
எழுதிக் கொண்டிருக்கிறாய்..
ஒரு மௌனத்தை..!
****
நன்றி : ( உயிர்மை.காம் / உயிரோசை - 18.5.09)
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=1418
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக