*
முத்தச் செதில்களில்
உதடு
குவித்தழுந்துகிறது
நீ
கசக்கிப் பிழிந்த
புன்னகைச் சாறு..
அழுந்தக்
கோர்த்துக் கொண்ட..
கைகளுக்குள்..
ஊறிப் பெருகுகிறது
வியர்வையாக
என்
காதல்..
நடை பின்னும்..
மணல் வெளியில்..
பாதங்கள்
வரைகின்றன..
கணக்கிட முடியாத
தொலைவுகளை..
கடல்
விளிம்பில்
உதித்தெழும்
நிலவின்
கிரண வீச்சில்..
பளபளக்கிறது..
உன்
பார்வையின் கூர்மை..
மெல்ல செருகியபடி..
என் வானத்தில்..
*****
எறும்பின்
பதிலளிநீக்குகறுத்த முதுகில்..
இசை
தொற்றிக் கொண்டது..!