செவ்வாய், ஏப்ரல் 21, 2009

விட்டுச் சென்ற சிறகில்..

*
மின்சாரம் செத்த..
நேற்றிரவில்..

விட்டில் பூச்சி
சிறகின் இழையில்..
சிக்கிக் கொண்டது..

எழுத முயன்ற
வார்த்தையொன்று..

கண்ணயர்ந்த
நொடியில்..

தன் ஒற்றைச் சிறகை..

என்
டைரியில்
கிடத்திவிட்டு..

இருட்டில் தொலைந்தது
விட்டில் பூச்சி..!

*****

2 கருத்துகள்: