வெள்ளி, ஏப்ரல் 24, 2009

மெட்ரோ கவிதைகள் - 8

*
செல்போனில்
பேசிக் கொண்டிருந்தவள்..
வார்த்தைகளோடு சேர்ந்து..

நழுவி விழுந்தாள்

விரையும் ரயிலின்
வாசலிலிருந்து..

தலையும் நசுங்கி..
ஒற்றைக் காலும் பிய்ந்ததாக..
பதிவாயிற்று
மார்ச்சுவரியில்..

தொடர்பு துண்டிப்புக்கான
காரண மறியா காதலன்..
எதிர்முனையிலிருந்து..

தொடர்ந்து
முயற்சிக்கிறான்..
எப்படியும்
அவளைப் பிடித்துவிட..

எவர் கவனிப்புமற்ற
முட்புதரில்..

விடாமல்
முனகிக் கொண்டே இருக்கிறது..
வலியோடு
ஒரு செல்போன்...

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக