செவ்வாய், ஏப்ரல் 21, 2009

திசையற்ற ஓட்டத்தில் கால் நனைக்கும் இரவு..

*
கனவின்
அடர் காட்டுக்குள்..
சொற்களின் கொடிகளை..
ஒதுக்கி..

நினைவுச் செதில்களின்
சிறு உருண்டைகளை..
பாதத்தால் நெருடி...

கருத்தப் பாறையொன்றின்..
கரத்தில்..

ரோமக் கற்றையின்..
சிக்குகள் ஒத்த..
பயத்தின் சடையை..

அடையாளமாய்...
விரல் சுற்றிக் கொண்டே..

குறுக்கிடும்..
நினைவு நதியின்..
திசையற்ற..ஓட்டத்தில்..
கால் நனைக்கும்..

தூங்கிய
இரவு..!

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக