புதன், ஏப்ரல் 22, 2009

மெட்ரோ கவிதைகள் - 5

*
பொருந்தா
உடையணிந்து..
முகத்திலறையும்
வெயிலோடு..

கையில்
பயன்படா
லத்தி பிடித்து..

சாலைதோறும்
விளக்குக் கம்பத்தின்
மெலிந்த
நிழலில்..

இடம் தேடி..

விறைப்பற்று
பரிதாபமாய்
நிற்கிறாள்..

தினந்தோறும்
பெண்
போலிஸ்..!

*****

1 கருத்து:

  1. விறைப்பற்று
    பரிதாபமாய்
    நிற்கிறாள்..

    தினந்தோறும்
    பெண்
    போலிஸ்..!

    அச்சச்சோ..

    பதிலளிநீக்கு