*
கையில் குழந்தையுடன்
மார்க்கெட் சென்ற
என் குறுக்கே புகுந்த..
பைக்கில்..
ஆச்சரியமாய் நீ..!
' என்னடா இந்தப் பக்கம்?' - என்றேன்.
' ஒரு மலர்கொத்துத் தேடி
மார்க்கெட் வந்தேன்..
கொத்து மலராய் உன்னைப் பார்த்து
ஸ்தம்பித்து நின்றேன் ' - என்றாய்..
அன்றிரவு முழுதும்..
உன் புன்னகை..
என் முகத்தில்..
இடமாற்றம் ஆனதைக் கண்டு..
இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறோம்..
நானும்..
என் குழந்தையும்..
******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக