*
ஊடறுக்கப்படும்
கால முனைப்புகளில்
பெருகி சுழித்தோடுகிறது
மனங்குறுகிய
அவலத்தின் நிழல்..
அசையுறும்
காற்றின் நாவில்..
எச்சில் தெறிக்கும்
வசவுகளின் ஈரம்..
உன்னெதிரே கண்செருகி
கலைந்த ஆடையின் மடிப்பில்
தூக்கியெரியப் பட்டதென் உலகம்..
உரிமையோடு
எரிந்த விளக்கொளியில்..
ஊசலாடியது
என் நிர்வாணம்..
மல்லிகை இதழ்களின்
முனைகளில்..
நிகழ்ந்ததொரு
வண்ண மாற்றம்..
பழுத்த செந்நிறத்தில்..
வாடியது
என் முகம்..
உன்
கைக்குள் சிக்கிய
என்
கொத்துப் பிடரியில்..
உண்டு பண்ணினாய்
என் நிணம் ஒழுகும் வலியை..
எல்லாத் தாம்பத்யங்களும்..
நிலவை குடித்து
காதலைப் பருகுவதில்லை..
பசியோடு அலையும்
மிருகங்களின் இரவாக..
என் போன்ற..
இரைக் கவ்வியும்
திரியக்கூடும்..
****
மல்லிகை இதழ்களின்
பதிலளிநீக்குமுனைகளில்..
நிகழ்ந்ததொரு
வண்ண மாற்றம்..
பழுத்த செந்நிறத்தில்..
வாடியது
என் முகம்..
வலி...