புதன், ஏப்ரல் 22, 2009

மெட்ரோ கவிதைகள் - 6

*
மேம்பாலப் பாம்புகளின்
முதுகில்
நெளிகின்றன
வெயில் பூசிக்கொண்ட
புழுக்கள்..

நகரும்
நொடிகளில் வழிகிறது..
மிக நிதானமாய்..
வாழ்க்கை..

இரண்டு
நிமிடத்திற்கொரு முறை..
வாகன நெரிசலில்..
பார்வை அப்பிக் கொள்கிறது..
வட்டச் சிவப்பை..

சலித்தபடி..
ஊடுருவும்
பிச்சைப் பாத்திரங்களில்..
வெயிலின் பளபளப்பு..

தலைக்கவசத்துக்குள்..
கொதித்துருளுகிறது..
வியர்வைக் குமிழ்கள்..

நகரம்..
ஒரு
பிரமாண்ட பசியோடு..
தினமும்..
எங்களை
நக்கிக் கொண்டிருக்கிறது..!

*****

1 கருத்து:

  1. இரண்டு
    நிமிடத்திற்கொரு முறை..
    வாகன நெரிசலில்..
    பார்வை அப்பிக் கொள்கிறது..
    வட்டச் சிவப்பை..

    சலித்தபடி..
    ஊடுருவும்
    பிச்சைப் பாத்திரங்களில்..
    வெயிலின் பளபளப்பு..

    தலைக்கவசத்துக்குள்..
    கொதித்துருளுகிறது..
    வியர்வைக் குமிழ்கள்..


    நல்ல சொல்லாடல் இளங்கோ...

    பதிலளிநீக்கு