சனி, ஏப்ரல் 25, 2009

முடிந்த காலம்.. - 2

*

பழுத்துவிட்ட
நட்பின் இலை ஒன்றை

பழைய டைரி
கவிதைகளுக்கு நடுவே..

வாசனையற்ற
ஒரு பக்கத்தில்..

பத்திரப்படுத்திய
ஓர் ஆண்டு அவகாசத்தில்..

தன்
மெல்லிய நரம்புகளின்
தோற்றத்துக்கு அப்பால்..

ஊடாடும் கவிதையை..

தனதாக்கிய
இறுமாப்பில்..

மௌனமாய்
உடைய காத்திருக்கிறது..
ஒரு
ஞானியைப் போல..!

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக