*
பழுத்துவிட்ட
நட்பின் இலை ஒன்றை
பழைய டைரி
கவிதைகளுக்கு நடுவே..
வாசனையற்ற
ஒரு பக்கத்தில்..
பத்திரப்படுத்திய
ஓர் ஆண்டு அவகாசத்தில்..
தன்
மெல்லிய நரம்புகளின்
தோற்றத்துக்கு அப்பால்..
ஊடாடும் கவிதையை..
தனதாக்கிய
இறுமாப்பில்..
மௌனமாய்
உடைய காத்திருக்கிறது..
ஒரு
ஞானியைப் போல..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக