*
பந்தாய் சுருன்டெழும்..
நினைவின் நிழலில்..
கைப்பிடிப் புன்னகையொன்று
ஆழமாய் புதைந்துக் கிடக்குமோ..!
நிலவின்
முனை உடைந்தப் பள்ளங்களில்..
தேக்கம் கண்ட..
வெயிலின்..வாசம்..
என் இரவில்...
நட்சத்திரமாய்...உதிர்கிறது..
அசையும்...பெயர் தெரியா
மரத்தின் இலைகளில்..
மெழுகாய்ப் பூசிப் போகிறாய்..
உன் பார்வைகளை...
மனசின்
வேர் நுனிவரை..பரவும்..
ஈரக் கணங்களை..
எளிதில் கடக்கும் விதமாக...
எப்போதும் அமைவதில்லை...
உன் வருகை..
விம்மிக் கசங்கும்..
பொழுதுகளின்..முதுகில்..
நேற்றைய இரவின்
கண்ணீர்த் துளியொன்று..
பாம்பாய் நெளிகிறது..
வீசும்
தென்றலின் பிடரியெங்கும்..
நுன்னியப் புள்ளிகளாய்...
வியர்க்கிறது..
உன் மௌனம்..!
******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக