*
ஒரு முறை
என் காதலி சொன்னாள்..
' ஆம்பளைங்க திருப்தியா
சாப்பிட்டா தான்
பொம்பளைங்களுக்கு..
சமைச்ச.. சமையல்ல..
சந்தோஷம் இருக்கும்..' -
இருக்கலாம்..
கைப் பக்குவம் என்பது..
கைகளுக்கு சொந்தமில்லை என்பதால்..
ஒரு முறை
என் காதலி சொன்னாள்...
' நிலா இல்லாத
ஒரு ராத்திரி முழுக்க..
உன் மடியில படுத்துக்கிட்டு
கவிதைகள் கேட்கணும்..'
அது சரி..
நிலவை மடியில்
கிடத்திக் கொண்டு...
நட்சத்திரங்களுக்கு அழைத்துப் போவதை விட..
அது ஒன்றும் சுலபமில்லை..
ஒரு முறை
என் காதலி சொன்னாள்...
' ஏன் எப்பவும்
உம்முன்னு யோசனையாவே இருக்கே..?
கொஞ்சம்
அப்பப்போ சிரிச்சா என்ன..? '
சிரிப்பில் என்ன உண்டு..
கண்கள் பேசும்போது..!
ஒரு முறை
என் காதலி சொன்னாள்..
' நான் ஊருக்குப் போறேன்..
திரும்பி வந்ததும்..
நாம கல்யாணம் பண்ணிக்கலாம்..'
பிறகொரு நாள்...
மூன்று முடிச்சுக்குள்...
இறுக்கிக் கொண்டது..
உணவின்..
கைப் பக்குவமும்..
இரவின்
நட்சத்திரங்களும்...
எப்போதும்
யோசனையாகவே
இருந்துவிட்ட...
அந்தப் புன்னகையும்..!
******
யதார்த்தமான கவிதை...
பதிலளிநீக்குஅன்புடன் அருணா
who si she anna ?
பதிலளிநீக்கு