*
தொட்டிச் செடிகளில்
பூக்கள் இல்லை..
பிடிவாதமாய்
படபடக்கிறது..
இலைகளில் காற்று..!
தண்டிலும்
மெல்லிய கிளைகளிலும்
ஊரும் எறும்புகள்..
நுகர்கின்றன
பூத்தலின் கணத்தையும்..
அதன் நிமித்தம்
துளிர்க்கும் ஈரத்தையும்..
சற்று முன்
ஒரு பட்டாம்பூச்சியை
வெளியேற்றி
பிய்ந்துத் தொங்கும்
பாதி லார்வாவின்
காம்புக்கு
பக்கத்தில்..
வெடிக்கக் கூடும்
ஒரு
ரோஜா மொக்கு..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக