திங்கள், ஜூன் 22, 2009

மெட்ரோ கவிதைகள் - 13

*
அளவாய் பிளந்த..
மெல்லிய மூங்கில் கீற்றின்..
நேர் பத்தை..
வளைவு பத்தை..

நறுக்கிய
வண்ணக் காகிதம் சுற்றிய
சிறு சுங்கு..

சுண்டியிழுக்கும் அழகோடு..
காற்றைக் கிழித்து..
மேலேறும்..
கச்சிதமான காற்றாடி..

வெயில் காய்த்து
உருக்கும்..
பிடரி வியர்வையில்..
உப்புப் பூத்த..
சட்டை காலரைச் சுருட்டி..

நேரம் கழித்து..
அம்மாவிடம்..
வாங்கவிருக்கும்..
அடிதனை மறந்து..

ஓட்டைப் பல்வரிசையில்..
புன்னகை வழிய..

துள்ளிக் குதிக்கிறான்..
நகரத்து சிறுவனொருவன்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக