வியாழன், ஜூன் 11, 2009

புலம்பெயர் சமிக்ஞை..

*
நெடிதோங்கி
முகில் தீண்ட
கையுயர்த்திய..
மூங்கில் மூக்கில்..

மரங்கொத்தி அலகு துளைத்த..

இசையிலையின்
மென் நரம்பில்..

சொல்லவொன்னா..
குறிப்பொன்றின்
கடைசி வரிகளை
கிறுக்கி முடித்த
கணப் பொழுதை..

திருடிப் பறந்த
குயிலொன்றின்
உதிர் சிறகு..

சவுக்கு புதர்
மண்டிய
மணற்வெளியில்..

எழுதிப் போகிறது
என்
தனிமையின்
குரலை..

கடலலை நோக்கி..

******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக