*
மௌனத்திரையின்..
ஒவ்வொரு
நூலிழையும்
காற்றில் அசைந்தபடியே..
இருக்கிறது..
என்
இரவு நெடுக..
வானத்து
நட்சத்திரங்களை..
என்
தோட்டத்துக்கு
அழைத்தபடியே
இருக்கிறது..
நெல்லி மரத்தின்
சிறு பூக்கள்..
சில் வண்டுகளின்
இடையறா
ஒலி வனப்பில்..
இருளின் வடிவம்..
சிறு துளியாய்..
திரள்கிறது..
புல்லின் நுனியில்..
மிதந்தூறி..
ஜன்னல் வழி
உட்புகுந்த
தென்றல்..
மௌனத்திரை கடந்து..
மேஜையில்..
எழுதாத
வெறும் தாளை..
புரட்டிப் படித்தபடி..
என் பிடரி..
மீதேறி..
என்னை..
விரைவாக.. போகும்படி
விரட்டியது..
திசையறியா பறவையின்
சிறகுகளை
யாசிக்கும் விதமாக..
நான் கனவு கொண்டிருந்தேன்..
ஒவ்வொரு
நூலிழையும்
காற்றில் அசைந்தபடியே
இருக்கிறது..
என்
இரவு நெடுக..!
******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக