திங்கள், ஜூன் 22, 2009

துணையற்ற படித்துறை..

*

பிரியத்தின்
கசடுகளை
வடிகட்டுகிறாய்..
தருணங்களை சலித்து..

நதியின் நீரோட்டத்தை..
மனக் குடுவையில்
ஊற்றுகிறேன்..

துணையற்ற
படித்துறையில்..
பகிர்தலுக்கான இடம்..
வெறுமையோடிக் கிடக்கிறது..

திசைகள்...
பொங்கி நுரைக்கின்றன..

இரவோ..
சிறு சிறு குமிழாய்..
உடைகிறது..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக