*
பிரியத்தின்
கசடுகளை
வடிகட்டுகிறாய்..
தருணங்களை சலித்து..
நதியின் நீரோட்டத்தை..
மனக் குடுவையில்
ஊற்றுகிறேன்..
துணையற்ற
படித்துறையில்..
பகிர்தலுக்கான இடம்..
வெறுமையோடிக் கிடக்கிறது..
திசைகள்...
பொங்கி நுரைக்கின்றன..
இரவோ..
சிறு சிறு குமிழாய்..
உடைகிறது..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக