வியாழன், ஜூன் 11, 2009

பாதையின் நீட்சி..!

*
காதறுந்த
செருப்புக்கு கேட்கவில்லை..
பாதங்களின் புலம்பல்..

சுருட்டிய காகிதத்துக்குள்
அடைக்கலமான..

அதன் மூக்கு..

வெளி நீண்டு
நுகர்ந்தபடி வந்தது..
பாதையின் நீட்சியை..

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக