*
கொல்லைப்புறத்தில்
முளைத்துக் கிடக்கும்
சொற்களை..
அறுத்துக் கொண்டிருக்கிறேன்..
கூரான
குறுவாளை..
லாவகமாய்ப் பிடித்திருக்கிறேன்..
பிடியோடு கூடிய
விமர்சனமென..
அசைபோடும்
தாடையினூடே
பிதுங்கும்..
வெண்ணிற நுரையெச்சில்
வழிசலோடு..
விடைத்த மூக்கருகே..
மொய்த்தபடி
இரவெல்லாம்..
ரீங்கரிக்கும்..
இலக்கிய ஈக்கள்..
விடியலில்..
கன்றின்...
'மா ' வெனும் அழைப்பின்
வைக்கோல் செரிமானத்தில்..
சொற்கள் மிச்சமிருப்பதில்லை..
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக