திங்கள், ஜூன் 22, 2009

காகித மலர்கள்..

*

ஞாபகத்தில்
இருத்திக் கொள்ள முடியாத
வார்த்தைகளை..

குட்டிக் காகித மலர்களாக..

உன்
தோட்டத்து
பூச்செடி யொன்றில்..
ரகசியமாய்
ஒட்டி வைத்திருக்கிறேன்..

நேரம்
கிடைக்கும்போது..

அவைகளை
சூடிக் கொண்டு வா...

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக