திங்கள், ஜூன் 22, 2009

மெட்ரோ கவிதைகள் - 17

*
கடற்கரையிலிருந்து
விடைபெறும்
தருணத்தில்..

யாசித்த
மூதாட்டியின்
உள்ளங்கையில் விழுந்தது..
முதல் மழைத் துளி..

இட்ட..
ஒற்றை நாணயம்..
முழுமையாக நனைந்த
நிமிடத்தில்..

நான்
மேற்கு நோக்கியும்..

அவள்..
தெற்கு நோக்கியும்..

மெல்ல நகரத்
தொடங்கினோம்..

அதற்குள்..
கூட்டம்..
சாலைக் கரைக்கு..
ஓடி விட்டது..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக