*
உயர்ரக..
பட்டுப்புடவையின்
பொன்னிற..
சரிகை நெய்யலில்..
இலைகளும்..கனிகளும்..
சிரித்தபடி..
பெண்ணுடலில்..
ஏறி சுற்றிக்கொள்கின்றன..
தவில் - நாகஸ்வர..
ஒலிகளின் அதிர்வை..
கேட்டறியாமல்...
பீரோவில்..
அம்மாவின்..
பழைய புடவைகளுக்கு..
அடியில்..
பத்திரமாய்
மடித்து வைக்கப்பட்டிருக்கலாம்..
அடகு கடையின்..
நகை-வட்டி சீட்டொன்று..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக