*
மழை ஈரம் உறிஞ்சி..
காயத் தொடங்கியிருக்கும்..
மொட்டை மாடியின்..
இளஞ் சிவப்பு
சதுரக் கற்களை..
தத்தி தத்திக்
கடந்தபடி..
நெல் தேடும்
குருவிகளை
இன்றும் காணவில்லை...
இட்ட முட்டைகளினின்று
குஞ்சுகள் பொரித்திருக்கலாம்..
சலித்து சேகரித்த..
வைக்கோல் பிசிறுகள் கொண்டு..
கூடுகள் வனைந்தபோதும்..
என்னை அழைக்கவில்லை..
ஒரு வேளை..
நாளை வரக்கூடும்..
குஞ்சுகளுக்கு
என்ன பெயர் சூட்ட..?
என்ற கேள்வியுடன்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக