*
முகமூடிகளை..
தன்
கைப்பைக்குள்..
ஒளித்து வைக்கின்றன..
எல்லாருக்குமான வார்த்தைகள்..
நிறப் பூச்சுகளை..
கவிதை கன்னத்தில்..
அழுந்த
பதிந்து விட்டு..
எங்கோ
வேடிக்கைப் பார்க்கும் பாவனையில்..
புன்னகைக்கின்றன..
எழுத பிரிக்கும்..
காகிதத்தின்
வெண்மை பிடிக்காமல்..
கருமை யாசிக்கின்றன..
சொல்லிவிட்டதாக
அடம் பிடிக்கின்றன..
முற்றுப்புள்ளிகளை..
அடுத்தடுத்ததாக..
அடுக்கியபடி..
தொழிற்சாலையின்
கதவடைப்பை..
அறிவிப்பு செய்கின்றன..
இனியும்..
தன்னிடத்தில்..
முகமூடிகள்..
மிச்சமில்லை யென்றபடி..
சிந்தனை உருக்காலையின்..
நினைவுக் குழம்புகளோ..
வழிந்தபடி இருக்கின்றன..
பலநூறு..
முக்மூடிகளுக்கான..
கச்சாப் பொருளாக..
பின்வரும்..
இரவு தோறும்..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக