*
மாலைநேரக் கலந்துரையாடலில்
காந்தியின் நீண்டு மெலிந்த
நிழலொன்றும்..
என் மடியில்..
என்னவென்று
புரிய மறுக்கும் விதமாக..
எதையோ
தேடியலைந்தபடி..
ஊர்ந்தோடுகின்றன...எறும்புகள்..
தொங்கிக் கொண்டிருக்கும்..
எங்கள் கால்களின்
பிரமாண்டங்களை
அவை
பொருட்படுத்தவில்லை..
நண்பரொருவர்..
அனைவருக்கும் வழங்கிய..
திணை மாவின்
உருண்டையிலிருந்து
உதிர்ந்த துகள்களுக்காக..
அவைகளும்
பிற எறும்புகளுக்கு..
சொல்லியிருக்கக் கூடும்..
' காந்தி சிலைக்கு பின்னால..
வந்து சேரு..'
கலந்துரையாடலில்..
தொடர்ந்து..
கருத்துக்கள்..
வடிவத்தினின்றும்.. உதிர்கின்றன..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக