*
உன்னை
வெறுத்துவிடும் தீர்மானத்தில்..
ஆப்பிள் சுவை மிகு..
வோட்காவை..
அதிகம் குடித்த..
நேற்றைய பனி இரவு..
என்
கனவின் படுதாவை..
நீள அகலமாய்க் கிழித்து..
என்னைச் சுருட்டி..
மின்னல்பட்டுக் கருகிய
ஆதி மரப்பொந்து
ஒன்றில்..
அடைத்து வைத்தது..
கண்கள்..உப்பி..
விடியலின் அகாலத்தில்..
வாசற்கதவின்..
கண்ணாடிச் சதுரத்தில்..
கண்ணீர் வடித்த
பனித்துளிகளை..
துடைக்கும்..நோக்கில்..
தள்ளாடி..
கதவைத் திறந்தேன்..
சிமென்ட் படியின்..
பனிப் பரப்பில்..
வெகுநேரம்..நீ நின்று திரும்பிய..
பாதச் சுவடுகள்..
சில்லிப்பாய்..
மிச்சமிருந்தது..
*****
வாழ்த்த வார்த்தையில்லை. பெருந்தகையே... கலைத்தாயின் தவத்தால் விளைந்த பெருந்தொகையே... பிச்சிட்ட... செம....
பதிலளிநீக்கு