திங்கள், ஜூன் 22, 2009

மெட்ரோ கவிதைகள் - 16

*
காற்றின் திசையை
காட்டிக் கொடுக்கின்றன
வால் நீண்ட
காற்றாடிகள்..

வட்டமமைத்து
உட்கார்ந்து கொண்ட
வசதியான
மணல் வெளியில்..

பீங்கான் தட்டுகள்
சுமந்து வந்த
சுண்டல்களை பகிர்ந்தபடி

யாவற்றையும் மென்றோம்..
நண்பர்களோடு..

மையம் தகர்ந்த
விளிம்புகள் என்றிருந்த..
இறுமாப்பை..

தலைக் குப்புற
வட்டத்துக்குள் செருகியபடி
காலத்தைக் குத்தியது..
காற்றாடி..

சம்பந்தமில்லாதவன்
கையில்
நூல் இருந்ததாக..
எப்படி சொல்லுவது..?

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக