*
பாட்டன்களின்
மண்டையோடுகளை
மண்ணுக்குள்ளிருந்து
வெளியேற்றுகிறது..
புதை காடு..
ஆண்..
குழந்தைகளின்
கால்பந்தாக
உதைபடுகிறது..
நூற்றாண்டுகளின்
வாழ்வு ரேகை தேயுமளவு..
பெண் குழந்தைகள்..
தண்ணீர் நிரப்பும்
குடுவையாகவும்..
சொப்பு சமையலுக்கான
ரசமாக்கவும்..
கையிலேந்தி
நடக்கின்றனர்..
மற்றுமோர்
புதை மேட்டை நோக்கி..
பற்களை இழந்த..
பாட்டன்கள்..
பரிதாபமாய் பார்க்கின்றனர்..
வக்கற்று..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக