*
சென்னை நகரின்..
தகிக்கும்
சாலையினின்று
பிரிந்தலையும்
சந்துகளில்..
தேடியலையும்
பிரமிளின் சுவடுகள்..
அர்த்த
ஆகிருதியின்
கைக் குலுக்களுக்குள்
அகப்பட்டுவிட்டன..
நிழல் வெளியின்
மையம் தகர்த்த..
வெயில் விளிம்பில்..
நின்றபடி..
கூவியழைக்கிறது..
வருடக்கணக்கில்
காற்றில்
அலையும்
பிரமிளின் இறகொன்று..
*****
( கவிஞர் பிரமிள் நினைவாய்.. )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக