திங்கள், ஜூன் 22, 2009

நினைவு - 1 ( பிரமிள் )

*

சென்னை நகரின்..
தகிக்கும்
சாலையினின்று
பிரிந்தலையும்
சந்துகளில்..

தேடியலையும்
பிரமிளின் சுவடுகள்..

அர்த்த
ஆகிருதியின்
கைக் குலுக்களுக்குள்
அகப்பட்டுவிட்டன..

நிழல் வெளியின்
மையம் தகர்த்த..
வெயில் விளிம்பில்..
நின்றபடி..

கூவியழைக்கிறது..

வருடக்கணக்கில்
காற்றில்
அலையும்
பிரமிளின் இறகொன்று..

*****

( கவிஞர் பிரமிள் நினைவாய்.. )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக