திங்கள், ஜூன் 22, 2009

சதுப்புக்காடு..!

*

என்
அறை..

' வார்த்தைகள் ' ஊறும்
சதுப்புக்காடாய் மிதக்கிறது..

அதன்
கரைகளடர்ந்த..
ஆச்சரிய நாணல்களின்..
வளைவுதோறும்
தொங்குகின்றன.. கேள்விக்குறிகள்..

பறிக்க நீளும்
கனவின் விரல்களிலிருந்து..

அனிச்சையாய்..
உதிர்கின்றன..
உவமை நகங்கள்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக